Vizhi Moodi
Karthik
5:35கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்தபிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்டபிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை காட்டிலே காயும் நிலவு கண்டுகொள்ள யாரும் இல்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்குச் சொந்தமில்லை மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிப்பூச்சிக்கு தெரியவில்லை விழி உனக்குச் சொந்தமடி வேதனைகள் எனக்குச் சொந்தமடி அலை கடலைக் கடந்தபின்னே நுரைகள்மட்டும் கரைக்கே சொந்தமடி கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது ஒருமுறை வாழ்ந்திடத் திண்டாடுது இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது பனித்துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்களெல்லாம் அட புடவைகட்டி பெண்ணானது ஏ புயல் அடித்தால் மலை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்துவிடும் சிரிப்புவரும் அழுகைவரும் காதலில் இரண்டுமே கலந்துவரும் ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை கண்பேசும் வார்த்தை கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை ஒருமுகம் மறைய மறுமுகம் தெரிய கண்ணாடி இதயமில்லை கடல் கைகூடி மறைவதில்லை காற்றில் இலைகள் பறந்தபிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்டபிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை