Thiloththama

Thiloththama

Deva

Длительность: 5:45
Год: 1995
Скачать MP3

Текст песни

ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா

ஆயிரம் கனவுகள் அம்மம்மா
தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும்
களைபவன் நானம்மா

ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ

ஓ தநனனா ஓஹோஓ தநனனா ஓஹோஒ

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே
என்ன

இரவு இப்போது நீளம் ஆனதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
என்ன

எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே
என்ன

வானம் இப்போது பக்கம் வந்ததே
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே
என்ன

ஓஹோ ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே
அது பிரிவதில்லை

ஓஹோ ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே
சொல்லும் அறிவதில்லை

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்
இல்லை

கண்கள் இல்லாமல் காட்சி என்பதே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நிலவு என்பதே
இல்லை

தண்ணீர் இல்லாமல் எந்த மீனும்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம்
இல்லை

மண்ணை தொடாத மழையும் வானிலே
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்
இல்லை

ஓஹோ இந்த இயற்கையெல்லாம்
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன

ஓஹோ இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்
இதில் கலக்கமென்ன

ஒரு முறை எந்தன் நெஞ்சில்
காதை வைத்து கேளடியோ
திலோத்தமா

இருதயம் உந்தன் பேரை சொல்லும்
சொல்லும் பாரடியோ
திலோத்தமா

ஆயிரம் கனவுகள் அம்மம்மா(ஆஆஆ )
தந்தவள் நீயம்மா(ஆஆஆ )
கனவினில் ஒன்று குறைந்தாலும்(ஆஆஆ )
களைபவன் நானம்மா (ஓஓஹோ ஓஓ ஓஓ ஓஓ)