Malai Kaatru
Vidyasagar
5:22நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் ஆஆஅ நீ அலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் நீ உடல் நான் நிழல் நீ விழவேண்டாம் நான் விழுவேன் நீ கிளை நான் இலை உன்னை ஒட்டும் வரைக்கும் நான் உயிர்த்திருப்பேன் நீ விழி நான் இமை உன்னை சேரும் வரைக்கும் நான் துடித்து இருப்பேன் நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய் கலந்திருப்பேன் நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன் நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துதான் நான் இசைப்பேன் நீ உடை நான் இடை உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன் நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன் நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன் நீ இரவு நான் விண்மீன் நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன் நீ காற்று நான் மரம்(ம்ம்ம்ம்ம்) என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்