Aadi Vanthen Aadi Vanthen

Aadi Vanthen Aadi Vanthen

K. S. Chithra, S.A. Rajkumar, Vaali, Kalidasan, And Rama Narayanan

Длительность: 4:19
Год: 2000
Скачать MP3

Текст песни

ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி
பாடி வந்தேன் பாடி வந்தேன் பாண்டியனார் தேவி
தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை

நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி
மாரி இவ சந்நிதியில் மாறாது நீதி
ஊரறியும் உலகறியும் கேட்டுபாரு நீயே
மாயவேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை

தொட்டியத்தில் அழகு தில்லையில்
திருச்சி நகர் உறையூரில்
காளியென்று கோயில் கொண்டு
கொலுவிருக்கும் அம்மனும் நானே
பண்ணாரியில் சமயபுரத்தில்
புஞ்சை வளர் தஞ்சையினில்
மாரி என்று பெயர் படைத்து
மக்களை காக்கும் அன்னையும் நானே
அகிலமும் சுழலாதா அடியே என் பிடியினிலே
அதிசயம் நிகழாதா நினைச்சா ஒரு நொடியினிலே
கைகளில் சக்கரம் சங்கை
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை
வார்சடை மீதினில் கங்கை
கொண்ட வள்ளலும் அள்ளிடும் நங்கை

ஆடி வந்தேன்
ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை

பம்பை சத்தம் முழங்கும் வேளையில் பம்பரமா ஆடிகிட்டு
பாம்பு புத்து நீங்கி வந்த பைரவி நான் பாரடி அம்மா
வேப்பஞ்சேலை இடுப்பில் கட்டுற வஞ்சியர்க்கு வாழ்வு தந்து
வாழ வைக்க என்னை விட்டா வையத்திலே யாரடி அம்மா
கருங்கல்லு சிலைதான்னு எளிதா நீயும் நினைக்காதே
கொடுப்பத கொடுக்காம மறச்சா இங்கு நடக்காதே
பூவையே பூவையே கேளு
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி
பூமியில் ஏதடி கூறு இந்த சக்திய மிஞ்சுற சக்தி

ஆடி வந்தேன்
ஆடி வந்தேன் ஆடி வந்தேன் அஞ்சு குடைக்காரி
தேடி வந்தேன் தேடி வந்தேன் தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோயிலுக்கு நாளும் அது தேவை

நான் பாம்பு என வேம்பு என மாறுகிற சாதி
மாரி இவ சந்நிதியில் மாறாது நீதி
ஊரறியும் உலகறியும் கேட்டுபாரு நீயே
மாயவேலை ஆகாதம்மா நானே ஒரு மாயை